Wednesday, July 21, 2010

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... (சொற்சித்திரம்)

மகேசு பேசுறேண்டா. எப்புட்றே மாப்ள இருக்க?

நல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?

இருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.

ஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.

அதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...

போடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...

நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?


இந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...

அதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?

வெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...

ஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?

அப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...

இருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...

நீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.

சுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...

பெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.

ங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...

சரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..


மாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?

அப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...


டாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...

என்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...

தக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?

இல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...

அட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??



Wednesday, July 14, 2010

நாம் ஏங்கும் புதுவுலகம்...!!!

அண்ணே! நாம இந்த உலகத்துல நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா? இல்ல நம்மளைப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா?-னு சரியாப் புரியலைண்ணே.

ஆனா ஒன்னுண்ணே... எப்போதும் நம்ம ஏதாவது ஒன்னுக்கு ஏங்கிக்கிட்டே இருப்போம். நம்ம அறிவு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நாம கண்டுபிடிச்ச பல கண்டுபிடிபுகளால நமக்கு கண்ணு போனதும், மூலம் வந்ததும் உண்மைதான்.

இப்ப உள்ள வாழ்க்கை முறையால, நானும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்-னு நம்ம எல்லாரும் மனசால பல மைல் தூரம் ஓடிக்கிட்டும்... மணிக்கணக்கா உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டும் போராடிக்கிட்டே இருக்கோம். இதுல அப்பப்ப வாழ்க்கை போரடிக்குதுன்னு ஒரு புலம்பல் வேற.

நம்ம வாழ்க்கையை சுத்தியும், வாழுமிடத்தை சுத்தியும் நம்மளே பல குப்பைகளை குமிச்சு வச்சுகிட்டு மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தா அப்பன்கிட்ட பேசுறதுக்குக்கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிற நிலைமையிலதான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

வாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம். நாம பயன்படுத்துகிற பொருட்கள்-ல பிரச்சனையினாலும், நாம் நிறுவனங்களிடமிருந்து பெரும் சேவைகள்-ல சந்தேகம்னாலும் தொடர்புக்கு நிறைய வாடிக்கையாளர் சேவைகள் அதுவும் இலவச தொடர்பு எண்ணில்...  நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு (அதற்கு மேற்பட்ட) தொடர்பு எண்கள் இருந்தும் தொடர்புகொள்ள நேரமில்லாமல் இருப்பது வெட்கக்கேடானது தான்.

நிறைய இருக்குன்னு சொல்றதுக்கு... நேரமில்லை... (இத்தோடவா விடப்போறேன்... அப்பப்ப சாவடிப்பேன்). நீங்க மறந்துடாம, சோம்பேறியா இருந்துடாம, இந்தப் படத்தைப் (ஒன்பது பாகத்தையும்)பாருங்க... முக்கியமா கீழ வரும் Sub Title - ஐப் படிங்க.

இந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது!

பிரபலப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தப் படத்தை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்துங்க. நிறைய நண்பர்கள் கண்டு களி(ழி)க்கட்டும். :-)


http://www.youtube.com/watch?v=C5CmMm_SRpM

http://www.youtube.com/watch?v=wbfKRx1glD4&feature=related

http://www.youtube.com/watch?v=dsh4IXjTeQU&feature=related

http://www.youtube.com/watch?v=9HEkEavkZJY&feature=related

http://www.youtube.com/watch?v=FMqOmb96SA0&feature=related

http://www.youtube.com/watch?v=x7YvR8rjV3k&feature=related

http://www.youtube.com/watch?v=EBvesLTYNDY&feature=related

http://www.youtube.com/watch?v=9dK3wVFMnS8&feature=related

http://www.youtube.com/watch?v=S28DaG-IJq8&feature=related

நன்றி இப்படத்தை இணையம் மூலம் பகிர்ந்த நண்பருக்கு!


Friday, July 9, 2010

உடையும் பிம்பங்கள்...

ஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே. அந்த பிம்பத்திற்கு நாம் ஒரு உருவம் கூட உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்திற்கான இயல்புகள் மற்றும் பண்புகள் நம்மாலேயே கற்பனையில் கலந்து பிசையப்பட்டு அந்த கற்பனை உருவத்தோடு பொருத்தி வைத்திருப்போம்.

இது அனைவருக்கும் இயல்பானதே. சில சமயங்களில் நாம் கேட்கும் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் கூட, சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.

சில சமயங்களில் நாம் உருவாக்கிய பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை நாம் நேரில் சந்திக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு வெளிப்படையாகச் சொல்லக்கேட்டிருப்போம். இன்னும் சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தகைய நற்செயல்கள் நாம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு வலு சேர்க்கும்.
 
சில சமயங்களில் இந்த கற்பனை பிம்பம் போல, நிஜத்தின் செயல்பாடுகளும், உருவமும் இல்லாமல் பொய்த்துவிடுகிறது. இந்த பிம்பம் உடைபடுதல் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பலருக்கு அதிர்ச்சியானதாகும். இந்த பிம்பம் உடைதலின் வெளிப்பாடுதான் "ச்சே இவரை என்னமோன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்புடி இருக்காரே!?", "இவரு நான் நினைச்ச மாதிரி இல்லை", "இப்பத்தான் தெரியுது இவரோட உண்மையான முகம்" என்ற புலம்பல்களும், அலுத்துக்கொள்ளுதலும்.


இந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும். சகித்துக்கொள்ளுதல் எனும் பண்பு நம்மிடம் இல்லாத போதுதான் உறவுகளில் சிக்கலும், மன இறுக்கமும் அதிகமாகிறது. நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கும் அசாத்திய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?

இந்த பிம்பங்கள் உருவாவது எப்படி இயற்கையோ, அதுபோலத் தான் உடைதலும்! எல்லா மனிதனும், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நல்லவனாகவோ, ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும். நல்லது/கெட்டது - சரி/தவறு என்பவை ஒவ்வொருவருக்குள்ளும் அந்தந்த சூழ்நிலைகள் உருவாக்கும் கோட்பாடுகளே. வழக்கம்போல பெரும்பான்மையே வெற்றிகரமானதாக / வெற்றிபெற்றதாகக் கருதப்படும். அதுதான் சரியா? அதுவும் சரியா? அதுவே சரியா? என்பவை கேள்விக்குறிகளாகவே தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை. பல்வேறு பாத்திரங்களுக்குள் பொறுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்போல அவன் இல்லை / நான் விரும்பியது போல அவன் இல்லை என்பது தான் நமது முரண்பாடுகளின் முச்சந்தி. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை", "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!

பொறுப்பு துறப்பி: இவ்வளவு சீரியசாக இருக்கும் இந்த பதிவை படித்து என்மீதான பிம்பம் உங்களில் உடைபட்டால் திசைகாட்டி பொறுப்பல்ல.


(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க) - (பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)