நல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?
இருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.
ஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.
அதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...
போடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...
நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?
இந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...
அதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?
வெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...
ஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?
அப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...
இருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...
நீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.
சுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...
என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...
பெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.
ங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...
சரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..
மாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?
அப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...
டாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...
என்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...
தக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?
இல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...
அட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??