Saturday, August 7, 2010

எல்லாம் போறவழில....

எல்லா நாட்டு பயபுள்ளைகளுக்கும் இப்ப ஒரு வியாதி தொத்திக்கிச்சுண்ணே... என்னா வியாதின்னா எதாயிருந்தாலும் போறவழில பாத்துக்கலாம்... பண்ணிக்கலாம்னு இருக்குறது...

இந்த வியாதி இப்ப ரொம்ப சீக்கிரமா பரவிகிட்டு வருது. இதுக்கு இனிமே மருந்து கண்டுபிடிச்சாலும் அதை போற வழிலதான் சாப்புட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு வியாதி முத்தீருச்சு. காலையில ஆஃபீசுக்கு போறத்துக்கு முன்னாடி சாப்புட்டு போடான்னு வீட்டுல அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொன்னாலும்... நேரமில்ல பிரெட் சாண்ட்விச்சு வை. போறவழில சாப்டுக்கிறேன்-னு சொல்றது இன்னைக்கு பிரபலமாயிடுச்சு. சரி சரி தலையவாவது சீவிட்டு போகலாம்லன்னு சொன்னாலும், சீப்பு பேண்ட் பாக்கெட்டுல இருக்கு போறவழில சீவிக்கிறேன்-னுட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும். பொண்ணுகளுக்கு இன்னும் வசதி முடிய விரிச்சுப்போட்டுட்டு போறதுல... தலை குளிச்சா காயவைக்க நேரம் ஒதுக்க வேணாம்...


வீட்டைவிட்டு கிளம்பும்போது சாமிகும்பிட்டுட்டு பொண்ணு யாராவது சொன்னாக்கூட... போறவழில கோயில்ல கும்பிட்டுக்கிறேன்-னு சொல்லிட்டு... கோயிலப்பாத்து கும்பிட்டுட்டு ஓடிகிட்டேயிருப்பாங்க. நல்ல வேலை பல்லு விளக்குறது, குளிக்கிறத மட்டுமாவது வீட்டுல பண்ணிட்டு போறாங்க... அப்பவும் பல்லு விளக்கலையான்னு கேட்டா, டாய்லட் போகும்போது சும்மாதானே உக்காந்திருப்பேன்... அப்போ விளக்கிக்கிறேன்-னு சொல்லுவாங்க பாருங்க... அட அட அடா... பல்லு விளக்கதவங்க, குளிக்காதவங்களுக்கு இது பொருந்தாது மக்களே...


இன்னும் சில பேரும் பல்லு விளக்கி, குளிச்சிட்டு போனா போதும். ஆஃபீசுல போயி டாய்லட் போயிக்கிறலாம்னு ஒரு கோஷ்டி இருக்கும். (என்ன மங்குனி இப்புடி வில்லங்கமா போறவழில பிரச்சனை ஆயிடாதான்னு கேக்குற...? ஏற்கனவே வழக்கமா போறவழில பிரச்சனை ஆனதுனாலதானே இப்புடி). இதுனால நம்ம நேரத்தை மிச்சப்படுத்துறமா இல்ல நமக்கு நேரம்பத்தலையான்னு தெரியல. அட அதை யோசிக்கக் கூட நேரமில்லையப்பா (இந்த இடத்துல ஒரு அண்ணே, அப்புறம் எப்புடிடா உங்களுக்கு இப்புடி மொக்கையா எழுதவும், முதுகு சொறிஞ்சுவிடவும் உங்களுக்கு நேரம் இருக்குன்னு மைன்ட் வாய்ஸ்ல கேக்குறது எனக்கு நல்லா கேக்குது).

வீட்டுக்கு காய்கறி, பலசரக்கு வாங்கலையா....? போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா...? போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா...? போறவழில சாப்டுக்கலாம். உள்ளூர் வியாபாரில இருந்து... உலக வியாபாரி வரை இந்த "போற வழில" விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்க. அவங்களும் போறவழில வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட போறவழில பயன்படுத்துற மாதிரிதான் இப்போ கண்டுபிடிக்கிறாங்க. அதுல பல பொருள் போரவழிலே தூக்கிபோட்டுட்டு போற மாதிரிதான் இருக்குங்கிறது தனிக்கதை.


சாட் பண்ணனுமா? மெயில் அனுப்பனுமா? பாட்டுக் கேக்கனுமா? படம் பாக்கனுமா? எல்லாத்துக்கும் இப்போ கையடக்கமா நிறையப் பொருள்கள் வந்திடுச்சு... (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா?? ;-) ) நம்ம ஆளுக அவசரத்தை புரிஞ்சுகிட்டுத்தான் சுடுதண்ணியை ஊத்தி ரெண்டு நிமிஷம் ஊறவச்சா போதும் அப்புடியே சாப்பிடலாம்னு நூடுல்ஸ் வகையெல்லாம் வந்துச்சு. நம்ம ஆளுக அதையும் பாத்ரூமுக்கு போறவழில ஊறவச்சிட்டுப் போவானுக.
 
சாப்புடுற விஷயமாவது பரவாயில்ல... சம்சாரம் தேடுறதும் அப்புடியே போறவழில பொண்ணைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு இப்போ நிறையப் பேரு கிளம்பீட்டாங்க. தம்பி நீ கட்டிக்கிற மாதிரி ஒரு பொண்ணு திருச்சில இருக்குன்னாங்க என்னைக்காவது லீவு நாள்ல போயி பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்டான்னு வீட்டுல சொன்னா... அவரு, "எனக்கு இப்ப லீவெல்லாம் இல்லம்மா... தீவாளிக்கு சொந்த ஊருக்குப் போவோம்ல... அப்போ போறவழில பொண்ணைப் பாத்துட்டு போயிடலாம்"-னு சொல்றாரு. பல வெளிநாடுகள்ல... இன்னைக்கு நம்ம இந்தியாவுலயும் கூடத்தான்... கல்யாணம் பண்ணின தம்பதிக கூட ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போது போறவழில கிட்டத்தட்ட பாதி தாம்பத்தியத்தை முடிச்சிடுறாங்க...மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது.


இதுக்கு யாரையும் குத்தம் சொல்லமுடியாது. அவனவன் இருக்குற அவசரத்துல குத்தவச்சும் சொல்லிக்காட்டமுடியாது. இதைப் படிச்சிட்டு சந்தோசமா இருந்தீங்கன்னா அப்புடியே போறவழில நாலைஞ்சு பேருகிட்ட சொல்லி பெருமைப்படுத்தீட்டு போங்க. செம காண்டுல (இதுக்கு எனக்கே அர்த்தம் தெரியாது) இருந்தீங்கன்னா... போறவழில துப்பீட்டுப் போங்க. இங்க துப்பீராதீங்க. அப்பப்ப உங்களைமாதிரி பல நல்லவங்க போறவழில வந்துபோற இடம் இது. :-)


இது எல்லாமே நம்ம மேல போறவழில நடக்குறதுதான்னு உங்க காவிகட்டுன மனசு சொல்லுமே!