அண்ணே! நிறையபேரு தலைப்பை சரியா படிச்சுட்டு தான் வந்திருப்பீகன்னு நினைக்கிறேன். என் மச்சானின் சகோதிரியான எனக்கு இன்றும் பிடித்த, எனது ஒன்று விட்ட மாமா மகளான, ஷாலினியின் அன்புக் கணவர், அண்ணன் அஜீத் நடித்த படத்தைப் பற்றியதல்ல இந்த பதிவு. அவர் ஒரு நேயமுள்ள மனிதர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது...
கடன் வாங்குறது தப்புன்னு, கணக்கு வாத்தியாரை தவிர எல்லாரும் சொல்லி இருக்காங்க. ஆனா, எந்த வாத்தியாரு அறிவுரை சொன்னாரோ, முக்குக்கு முக்கு... மூக்கு கண்ணாடிய போட்டுக்கிட்டு, வட்டிகடை வச்சிருக்காங்க... முந்தியெல்லாம், அந்த கடைக்குள்ள போறதுக்கு, பலான இடத்துக்கு போற மாதிரி ஒளிஞ்சு மறைஞ்சு முடிஞ்சா தலையில துண்டை போட்டுக்கிட்டு போவாங்க... கடன வாங்குனவன் கட்டலையினா, அந்த கடைக்காரன் துண்டை போட்டுகிட்டு திரிவான். கொஞ்சம் விவகாரமான ஆளா இருந்தா வாங்குனவன் கழுத்துல துண்டை போட்டு கேட்பான்.
பல வீடுகள்ளையும், நாடுகள்ளையும் பட்ஜெட்டுல துண்டு விழுகுரதுனால தான் கடன் வாங்குறாங்க. யோவ், பக்கெட்டுல துண்டு விழுந்த துவைச்சு புழிஞ்சு காயப்போட்டுடலாம். பாருங்கய்யா... இந்த கடனுக்கும், துண்டுக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு... நம்ம, கடன்காரன்கிட்ட... அய்யய்யோ கடன் கொடுக்குற கடைகாரன்கிட்ட, வாங்குற பணத்துக்குப் பேரும் அசல் தான். இந்த அசலை கடைகாரன், கள்ளப் பணமா கொடுத்தாலுஞ் சரி, கள்ள நோட்டா கொடுத்தாலுஞ் சரி நாம அதுக்கு வட்டி கட்டனும்.
இந்த வட்டியோட விகிதம் சில இடத்துல சோமாலியா குழந்தை மாதிரியும்(இப்ப எங்க இருக்கு??), சில இடத்துல கறிக்காக வளக்குற வெள்ளை பன்னி மாதிரியும் இருக்கும். இந்த வட்டிய கணக்கு பண்றதுக்கு, நம்ம பய புள்ளிக குட்டிய கணக்கு பண்றதுக்கு வச்சிருக்குற மாதிரி பல சூத்திரம் இருக்கு. இதுல தனி வட்டி, கூட்டு வட்டி அது போடுற குட்டின்னு நம்ம தல (யோவ், நான் அவர சொல்லலைய்யா...) மேல ஏறி உக்காந்துக்கிட்டு... நம்ம கழுத்த நெரிச்சுகிட்டு இருக்கும். இந்த அசலும், வட்டியும் சேர்ந்து ரத்தம் குடிச்ச குடும்பம் எல்லாம் சத்தமில்லாம, விஷ மருந்துக்கு பிரெஞ்சு முத்தம் குடுத்துருக்காங்க. ரொம்ப சோகமான எளவுகள் (இழவுகள்) எல்லாம் நடந்திருக்குய்யா இதுனால...
ஏதோ இந்த பணங்கள் மட்டும், ஜாதி மத பேதமில்லாம பல இடங்கள்ல சமத்துவமா இருக்குன்னு பார்த்தா... எல்லாருகிட்டயும் சமமா இல்லாம போயிடுச்சு. எல்லாரும், வசதியா இருக்கணும், வசதியா வாழணும்னு நினைச்சுகிட்டு, பணக்காரனா வாழ ஆசைப்பட்டு, தன் வசதிய இழந்துடுறாங்க. பணக்காரனா வாழ்றது வேற.. வசதியா வாழ்றது வேற-னு இன்னும் நிறைய பேறு புரிஞ்சுகிறது இல்ல...
வெள்ளைக்காரன் மொழியில இந்த அசலுக்குப்(படத்தை சொல்லலை சாமி) பேரு principal amount... அவரு பணத்தை ஏன்யா இங்க இழுக்குராய்ங்கன்னு நான் நினைச்சதுண்டு... இதவிட கொடும அந்த வட்டிக்கு பேரு Interest ... யாருய்யா அவ்வளவு interest-ஆ கொடுக்குறான்? இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமில்ல அய்யா.... திரும்ப கொடுக்கலேன்னா அடித்தல், வகுந்தல் (உடம்பை), பறித்தல் (உயிரை)-னு நிறைய வ(லி)ழிவகை வச்சிருப்பாய்ங்க...
இப்பவெல்லாம், சில தேன் குரல் கொண்ட, கருங்குயில்களையோ, இல்லை பெருங்குயில்கலையோ விட்டு நம்ம தொலைபேசியில் தொல்லை குடுத்து, கடன் குடுக்குராய்ங்க... கொஞ்சம் கவுரவமாத்தான் இருக்கு... அவயங்களும், நம்மளும் ஒழுங்கா நடந்துகிட்டா... இருந்தாலும் மக்களே, தேவைகளை தேவை இல்லாம கூட்டி, தேவையே இல்லாம கடன வாங்கி... தேவையில்லாத பிரச்சனைகள்ல மாட்டிக்காதீங்க... இது நமக்கு தேவையில்லாத பிரச்சனை... அப்பறம் கடன் குடுத்தவன், அசல் பட காமெரா மாதிரி நம்ம பின்னாடியே வருவாய்ங்க... உஷாரா இருங்க... உங்க நிஜார கழட்டிடுவாய்ங்க...