கடத்தி கொலை!
அன்றாட செய்திகள் கண்டு
அயற்சியாய் தானிருக்கிறது...
சந்ததி செய்த பிழைகளா? - இல்லை
தாய்தந்தையரின் சந்திப்பிழைகளா?
சிந்தை பிறழ்ந்தவர்களா? - இல்லை
சிதறிய விந்தில் பிறந்தவர்களா?
மிருக இனத்தின் பகுதியா? - இல்ல
மனித இனத்தின் விகுதியா?
விலங்குகள் கூட சீண்டுவதில்லை
தம்மின மாற்றான் குட்டிகளை
எவ்வெதிர்ப்புக்கேனும்...
காதலில் பிறந்தவர்களா? - இல்லை
கழுகு, பருந்துகளின் எச்சங்களில்
கருவுற்றவர்களா? - அவைகளுக்குத்தான்
குட்டி உண்ணும் பழக்கம்...
இவர்களுக்கும் ஆற்றறிவு
கணக்களவில் மட்டும்...
குலவாரிசுகளைக் குதறிய - இவர்கள்
குறியின் குறுக்குவெட்டுத்தோற்றம்
கண்காட்சியாகட்டும் காவல்துறையே!
பிறப்புறுப்பின் வழி பிறந்தவர்களா? - இல்லை
பிறிதொரு உறுப்பின் வழியோ?
கருவின் உதிரம் குடிக்கத்துடித்த சைக்கோ
கேட்டிருந்தால் பெற்றவளே அனுப்பியிருப்பாள்
மாதம் மூன்று நாட்கள் பார்சலாய்...
குரோதங்களைக்
குட்டிகளிடம் காட்டுமுனக்கு
மூளை எந்த மூலையிலிருக்கிறது? - உன்
விதைப்பையில் விந்துநீர்த்து
வெற்றுக்காற்று நிரம்ப்பட்டும்... - உன்
வீரமெல்லாம் அதைச்சுமக்கவே
விரையம் செய்யப்பட வேண்டும்...