Saturday, October 30, 2010

ஒரு விறைவீக்கக்காரனின் வீரம்

தொழிலதிபர்களின் குழந்தைகள்
கடத்தி கொலை!
அன்றாட செய்திகள் கண்டு
அயற்சியாய் தானிருக்கிறது...

சந்ததி செய்த பிழைகளா? - இல்லை
தாய்தந்தையரின் சந்திப்பிழைகளா?
சிந்தை பிறழ்ந்தவர்களா? - இல்லை
சிதறிய விந்தில் பிறந்தவர்களா?
மிருக இனத்தின் பகுதியா? - இல்ல
மனித இனத்தின் விகுதியா?

விலங்குகள் கூட சீண்டுவதில்லை
தம்மின மாற்றான் குட்டிகளை
எவ்வெதிர்ப்புக்கேனும்...

காதலில் பிறந்தவர்களா? - இல்லை
கழுகு, பருந்துகளின் எச்சங்களில்
கருவுற்றவர்களா? - அவைகளுக்குத்தான்
குட்டி உண்ணும் பழக்கம்...
இவர்களுக்கும் ஆற்றறிவு
கணக்களவில் மட்டும்...

குலவாரிசுகளைக் குதறிய - இவர்கள்
குறியின் குறுக்குவெட்டுத்தோற்றம்
கண்காட்சியாகட்டும் காவல்துறையே!
பிறப்புறுப்பின் வழி பிறந்தவர்களா? - இல்லை
பிறிதொரு உறுப்பின் வழியோ?

கருவின் உதிரம் குடிக்கத்துடித்த சைக்கோ
கேட்டிருந்தால் பெற்றவளே அனுப்பியிருப்பாள்
மாதம் மூன்று நாட்கள் பார்சலாய்...

குரோதங்களைக்
குட்டிகளிடம் காட்டுமுனக்கு
மூளை எந்த மூலையிலிருக்கிறது? - உன்
விதைப்பையில் விந்துநீர்த்து
வெற்றுக்காற்று நிரம்ப்பட்டும்... - உன்
வீரமெல்லாம் அதைச்சுமக்கவே
விரையம் செய்யப்பட வேண்டும்...


Wednesday, October 27, 2010

ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?

நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினியரிங் காலேஜ்-ல படிக்கனும்னா பொட்டி பொட்டியாப் பணங்கட்டனுமாம்... நம்மகிட்ட பொட்டி வாங்கவே பணமில்ல... வேறவழில்யில்ல, நமக்குத் தெரிஞ்ச காலேஜ்-ல சொல்லி ஏதாவது பி.எஸ்.சி-ல இடம் வாங்கித்தாறேன். "அதுலயாவது" நிறைய மார்க் எடுத்து உருப்புடப் பாருப்பானு பல வீடுகள்ல இந்த சங்கீதம் மே மாத இறுதில அரங்கேறும்.

பி.எஸ்.சி-னு முடிவானதுக்கப்புறம் படிச்ச பெரியவங்களோட கலந்தாலோசிச்சு மேத்ஸ் எடுக்கலாமா? ஃபிசிக்ஸ் எடுக்கலாமா? கெமிஸ்ட்ரி எடுக்கலாமான்னு? பலபேரு உயிரை எடுப்பாங்க. அதுல சில ஆளுக கெமிஸ்ட்ரி வேணாம் சார்... அவன் போயி ஆசிட்டுகள கலக்க வேண்டியிருக்கும். அது டேஞ்சரு. மேத்சும் வேணாம். அதைப் படிச்சா வாத்தியாரப் போறதுக்குத் தான் அதிக வாய்ப்பு .அதுனால, பேசாம ஃபிசிக்ஸ் படிக்க வைங்க. எதிர்காலத்துல சைண்டிஸ்டா போகலாம் (நம்ம லெவல் அவங்களுக்குத் தெரியல. பாவம் விட்டுருவோம்). இல்லைனா எம்.சி.ஏ படிக்கலாம். ஒன்னுமே முடியலைன்னா வாத்தியாராப் போகலாம்( வாத்தியார் வேலைக்கு தகுதி எப்புடி வச்சிருகாய்ங்க பாருங்க).- ன்னு சொல்லி ஒருவழியா தெளிவடைய(!?) வச்சிருவாங்க.

தம்பி நானும் விசாரிச்சிட்டேன். எம்.சி.ஏ படிச்சா டாக்டர் படிப்பு அளவுக்கு சம்பாரிக்கலாமாம். அதுனால ஒரு ஃசேப் சைடுக்கு பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படி. அதுல நல்ல மார்க் எடுத்தீன்னா எம்.சி.ஏ படிச்சிட்டு வேலைக்கு போயி நல்லா சம்பாதிக்கலாம். கம்பியூட்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்காம்(அதுசரி, கம்பியூட்டரை வச்சு ஜோசியம் பார்த்த கோஷ்டிதானே நம்ம ஆளுங்க). அப்படி இப்படின்னு சொல்லி நமுக்கு புடிக்காத பாடமான ஃபிசிக்ஸ்-ல சேர்த்துவிட்டாங்க. என்ன சப்ஜெக்டுங்க அது... முதல் விதி, இரண்டாம் விதின்னு உயிரை எடுப்பானுங்க. நம்ம விதியையே நம்ம நொந்துகிட்டு இருக்கும்போது இதுல இவனுக விதி... என்ன பன்றது எல்லாம் "தல"விதி.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு உறுதியா நம்பி நல்ல மார்க் எடுத்து... எம்.சி.ஏ சீட்டும் வாங்கியாச்சு. அதை படிச்சு முடிச்சிட்டு ஒரு வழியா வேலைக்கும் சேர்ந்தாச்சு. இந்த வேலையில பிறப்பிக்கப்படுகிற லேங்குவாஜ்/டெக்னாலஜியை கணக்கெடுத்தா நம்ம மக்கள்தொகையை விட அதிகமா இருக்கும் போலங்க. பத்தாக்கொறைக்கு வெர்சன் வேற 1.0 , 2.0 -ன்னு. கருமம்டா சாமி. இந்தப் படிப்பை படிச்சவனுக்கெல்லாம் மூலம் நட்சத்திரமா இருக்கும் போல. எப்போதும் குடும்பத்தைப் பிரிஞ்சே இருப்பானுக. இந்த வேலை மூலம் ஆதி மூலம் முதல் பேதி "மூலம்" வரை நட்பாகக் கிடைக்கும். இதுல வேற இந்த ட்ரெய்னிங் அந்த ட்ரெய்னிங்-னு போட்டு உயிரை எடுப்பாணுக. நம்மெல்லாம் மத்தியான சோறு ஓசியாப் போடுற ட்ரெய்னிங் மட்டும்தான் கலந்துக்கிறது. நல்லா ட்ரெய்னிங் எடுத்து நிறைய சம்பாதிக்கிறது எடுத்துக்கு மனுஷன் வயிறார சாப்புடுறதுக்குத்தானே. அதுக்கு நேரடியாவே சாப்பாடு போடுற ட்ரெய்னிங்-ல கலந்துக்கிறது தானே புத்திசாலித்தனம்.


எப்பவாவது அதிசயமா ஒருவாரம், ரெண்டுவாரம் லீவு குடுப்பாணுக. சரி வீட்டுல போயி பெத்தவங்களோடவும், மத்தவங்களோடவும் சந்தோசமா இருந்துட்டு வரலாம்னு போனா.... அங்க சில கொடுமை "தலப்பா" (தலைப்பாகை) கட்டிக்கிட்டு ஆடும். கிராமப்புறம் வேற... நம்ம கூட வேற டெக்னாலஜி-ல வேலை பாக்குறவனுக்கே நம்ம என்ன வேலை பாக்குறம்னு புரியவைக்க முடியாது. இதுல இவங்களுக்கு புரியவைக்கனுமா... விளங்கிடும்...

அவங்க கேக்குற கேள்வியெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா...? கம்புட்டர் வேலை பாக்குறங்கிரியே உனக்கு கம்பியூட்டர் செய்யத் தெரியுமா? இந்த ஜோசியம் சொல்ற கம்பியூட்டர் உங்க கம்பெனில செய்யிறாங்களா? அது எவ்வளவு விலை இருக்கும்? இந்த கம்பியூட்டர் அப்புடி என்னதான் பண்ணும் அதைப்போயி இவ்வளவு விலை சொல்றானுக? புதுசா தொறந்த ராசி மளிகைக்கடையில கூட கம்பியூட்டர் பில்லிங் தான். அங்க நமக்கு தெரிஞ்ச பயதான் வேலை பாக்குறான். அவனுக்கு மூவாயிரம் சம்பளந்தான் தாராக. அவன் ரொம்ப நல்ல பையன். கைசுத்தமான ஆளு. கெட்டிக்காரன் கூட. நீ அவனுக்கு உன் கம்பெனில முப்பாதாயிரம் ரூவாய்க்கு வேலை வாங்கித்தரக்கூடாதா?

இதை பக்கத்துல இருக்குற இன்னொரு மங்குனி அமைச்சரு விளக்குவாரு... அட அப்புடி இல்ல மச்சான். வேறவேற கம்பெனில ஸ்க்ரூ, தகரம், கண்ணாடின்னு செஞ்சு வரும் அதை இவுகளை மாதிரி பெரிய கம்பெனில இருக்கவுக மாட்டி ஒக்குட்டு வியாபாரத்துக்கு அனுப்புவாக. (அப்புடித்தானே மருமயனே-ன்னு நம்மகிட்ட கேள்வி வேற). இல்ல நான் வேலைபாக்குறது ஒரு பேங்குக்கு அப்புடின்னு சொன்னா... அங்க உங்களுக்கு லோன் எல்லாம் தருவாய்ங்களா? அப்பா உனக்கு கம்பியூட்டர்ல கணக்கெழுதுற வேலையா? நீ பேசாம அங்கிட்டு இங்கிட்டு கெடந்து கஷ்டப்படுரதுக்கு உன் வேலைய நம்ம ஊரு இந்தியன் பேங்குக்கு மாத்திக்கிட்டு வந்துரலாமே... அங்ககூட மேனஜர் டேபிள்-ல ஒரு கம்பியூட்டர் பார்த்தேன் - அப்புடின்னு தாக்குவாய்ங்க பாருங்க... ரஷ்ய ராக்கேட்டேல்லாம் தோத்துப்போயிடும்.


இல்ல... அந்த பேங்குடைய வெப்சைட் இன்டர்நெட்-ல இருக்குறத பார்த்துக்கணும். அதை சில நேரம் மாத்தணும்... எல்லாத்தையும் ஆடோமெட் பண்ணனும்னு என்னென்னமோ விபரம் சொன்னாலும்... ம்ஹூம். என்னப்பா இன்டர்நெட் இருந்தா கெட்டுப் போயிருவானுகன்னு சொல்றாங்க...நீ அதுலே வேலை பாக்குறம்னு சொல்றே-ன்னு ஒன்னு விழும். இன்னொரு ராக்கெட்டு சீருனதைப்பாருங்க... ஏப்பா! உன் கம்பெனில கம்பியூட்டரை கொடுத்து வேலைபாக்க சொல்லி உனக்கு சம்பளம் கொடுக்குராணுக. அப்ப அவனுகளுக்கு செலவு போக என்னப்பா மிஞ்சும்? நம்ம ஊர்ல அந்த முருகேசன் பயலைப் பாரு நாலைஞ்சு கம்பியூட்டரை வச்சுக்கிட்டு சின்ன ஒரு இன்டர்நெட் கம்பெனி வச்சுகிட்டு... அங்க போயி அதுல வேலை பாக்குறவங்ககிட்ட ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூவாயின்னு டெக்னிக்கலா சம்பாரிக்கிராம்பா... (விளங்கிடும்)

அப்பவே புரிஞ்சுக்கணும் நமக்கு லீவு கொடுத்த மேனஜர் அவருகும்பிடுற குலதெய்வத்துக்கிட்ட சொல்லி, சனியனுக்கு சகல வசதியும் பண்ணிக்குடுத்து நம்ம கூட அனுப்பி வச்சிட்டார்னு. யாராவது புரிய வச்ச மாகாராசனுங்க, எப்புடின்னு சொல்லுங்கப்பா... இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு...



Saturday, October 23, 2010

உள்குத்து கவிதைகள் - 8 - துறவிகள் ஸ்பெஷல்

மனிதம் வளர்க்க வேண்டியவர்கள்
மதம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பளிங்கு பங்களாவிலும்
பாதாளச் சாக்கடையின்
பாதச் சுவடுகள்
இருப்பது நிரூபனமாயின...
திரைகள் கிழிந்து
முகம் நிர்வாணமாயின...
உண்மை இறை தேடியவர்கள் - இன்று
உணர்ச்சியால் இரை தேடுகிறார்கள்...

உடை நிறம் மட்டுமே மாறியிருக்கிறது
காவியாகவோ, வெள்ளையாகவோ...
உங்கள் மனங்களிலிருந்து
அகலவில்லை ஒரு மாசும்...
துறந்தவர்கள் எல்லாம்
திறந்தே வைத்திருக்கிறார்கள்
தங்க(ள்) வாசலை...
எவளேனும் ஒருத்தியாய் வரும்வரை!

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ
ஊருக்கு மட்டும் உபதேசம் - ஆனால்
எல்லாவளும் ஒருத்தியாய்
அவன் ஒருவனுக்கே என்ற நினைப்போடு...!

அனைத்தும் மறைக்க
வகை-தொகையாய் பூசை ஆண்டவனுக்கு...
நன்றி கெட்டவன் காட்டிக்கொடுத்துவிட்டான்
வருமான வரித்துறைக்கு...

நித்ய ஆனந்தமாய் வாழ
லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்...
புரிந்துகொண்டு - என்
அறைக்கதவை முழுத்தாழிட்டாள்
ஒரு உயர்தர பக்தை!

சர்ப்பம் தொழவும்...
கர்ப்பம் கலைக்கவும்...
துறவிகளுக்கு!


Wednesday, October 13, 2010

சிங்கபூருக்கு வாரீயளா? - செலவில்லாம...

உலகம் முழுதும் பரவியிருக்கிற என் சொந்தக்காரய்ங்களா!!! நல்லாயிருக்கீகளா? உங்களையெல்லாம் பாக்கனும்னு எங்களுக்கு ஆசை. சிங்கபூர் வாரியளா?? வாய்ப்பை நாங்க தாரோம். வாகையை நீங்க சூடுங்க...


கொடுத்திருக்கிற மூனு பிரிவுல, எது பத்தி நிறைய இருக்கோ உங்க அறிவுல... அதை தெரிவு செய்யுங்க.

தலைப்பை தலைக்குள்ள வாங்கி... தலைக்குள்ள இருக்குறத கட்டுரையா தழைக்க வைங்க..
 
எதுவும் பதிவு பண்ணத் தேவையில்லை... பதிவரா மட்டுந்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல... யாருவேணும்னாலும் எழுதலாம்... ஆனால் தமிழ்-ல தான் இருக்கணும்.


தலைப்புல அரசியல் பிரிவு இருக்கும்... மணற்கேணி மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டிகளிலும் வெற்றியாளர்களை கவுரவிப்பதிலும் அரசியலால் பிரிவுகள் இருக்காது... பயப்புடாமா வாங்க...

அறிவுசார்ந்த உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் போட்டியைப் பத்தி சொல்லுங்க...


ஓட்டுக்கும் கூட்டுக்கும் இங்க வேலையில்லை...

கட்டுக்கதைகளை எழுதி எழுதி பழகினது போதும்... மொக்கையே போடாம சக்கையா கட்டுரைகளை தயார் பண்ணுங்க. போட்டில வென்று சிங்கபூர் கிளம்ப தயாராகுங்க...

விதிகளை தெரிஞ்சுக்கிரனுமா?? அட உங்க விதியை இல்லங்க... போட்டிகளுக்கான விதிமுறைகளை இங்க போயி பாருங்களேன்... நல்லா கொடுத்துருக்காங்க டீட்டெயிலு...

இன்னும் என்னா வெயிட்டிங்கு... நாளும் நேரமும் ரன்னிங்கு... எழுதி அனுப்புனாத் தானே கிடைக்கும் வின்னிங்கு... ரெடி ஜூட் மக்கா... ஜூட்...