Saturday, August 7, 2010

எல்லாம் போறவழில....

எல்லா நாட்டு பயபுள்ளைகளுக்கும் இப்ப ஒரு வியாதி தொத்திக்கிச்சுண்ணே... என்னா வியாதின்னா எதாயிருந்தாலும் போறவழில பாத்துக்கலாம்... பண்ணிக்கலாம்னு இருக்குறது...

இந்த வியாதி இப்ப ரொம்ப சீக்கிரமா பரவிகிட்டு வருது. இதுக்கு இனிமே மருந்து கண்டுபிடிச்சாலும் அதை போற வழிலதான் சாப்புட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு வியாதி முத்தீருச்சு. காலையில ஆஃபீசுக்கு போறத்துக்கு முன்னாடி சாப்புட்டு போடான்னு வீட்டுல அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொன்னாலும்... நேரமில்ல பிரெட் சாண்ட்விச்சு வை. போறவழில சாப்டுக்கிறேன்-னு சொல்றது இன்னைக்கு பிரபலமாயிடுச்சு. சரி சரி தலையவாவது சீவிட்டு போகலாம்லன்னு சொன்னாலும், சீப்பு பேண்ட் பாக்கெட்டுல இருக்கு போறவழில சீவிக்கிறேன்-னுட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும். பொண்ணுகளுக்கு இன்னும் வசதி முடிய விரிச்சுப்போட்டுட்டு போறதுல... தலை குளிச்சா காயவைக்க நேரம் ஒதுக்க வேணாம்...


வீட்டைவிட்டு கிளம்பும்போது சாமிகும்பிட்டுட்டு பொண்ணு யாராவது சொன்னாக்கூட... போறவழில கோயில்ல கும்பிட்டுக்கிறேன்-னு சொல்லிட்டு... கோயிலப்பாத்து கும்பிட்டுட்டு ஓடிகிட்டேயிருப்பாங்க. நல்ல வேலை பல்லு விளக்குறது, குளிக்கிறத மட்டுமாவது வீட்டுல பண்ணிட்டு போறாங்க... அப்பவும் பல்லு விளக்கலையான்னு கேட்டா, டாய்லட் போகும்போது சும்மாதானே உக்காந்திருப்பேன்... அப்போ விளக்கிக்கிறேன்-னு சொல்லுவாங்க பாருங்க... அட அட அடா... பல்லு விளக்கதவங்க, குளிக்காதவங்களுக்கு இது பொருந்தாது மக்களே...


இன்னும் சில பேரும் பல்லு விளக்கி, குளிச்சிட்டு போனா போதும். ஆஃபீசுல போயி டாய்லட் போயிக்கிறலாம்னு ஒரு கோஷ்டி இருக்கும். (என்ன மங்குனி இப்புடி வில்லங்கமா போறவழில பிரச்சனை ஆயிடாதான்னு கேக்குற...? ஏற்கனவே வழக்கமா போறவழில பிரச்சனை ஆனதுனாலதானே இப்புடி). இதுனால நம்ம நேரத்தை மிச்சப்படுத்துறமா இல்ல நமக்கு நேரம்பத்தலையான்னு தெரியல. அட அதை யோசிக்கக் கூட நேரமில்லையப்பா (இந்த இடத்துல ஒரு அண்ணே, அப்புறம் எப்புடிடா உங்களுக்கு இப்புடி மொக்கையா எழுதவும், முதுகு சொறிஞ்சுவிடவும் உங்களுக்கு நேரம் இருக்குன்னு மைன்ட் வாய்ஸ்ல கேக்குறது எனக்கு நல்லா கேக்குது).

வீட்டுக்கு காய்கறி, பலசரக்கு வாங்கலையா....? போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா...? போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா...? போறவழில சாப்டுக்கலாம். உள்ளூர் வியாபாரில இருந்து... உலக வியாபாரி வரை இந்த "போற வழில" விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்க. அவங்களும் போறவழில வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட போறவழில பயன்படுத்துற மாதிரிதான் இப்போ கண்டுபிடிக்கிறாங்க. அதுல பல பொருள் போரவழிலே தூக்கிபோட்டுட்டு போற மாதிரிதான் இருக்குங்கிறது தனிக்கதை.


சாட் பண்ணனுமா? மெயில் அனுப்பனுமா? பாட்டுக் கேக்கனுமா? படம் பாக்கனுமா? எல்லாத்துக்கும் இப்போ கையடக்கமா நிறையப் பொருள்கள் வந்திடுச்சு... (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா?? ;-) ) நம்ம ஆளுக அவசரத்தை புரிஞ்சுகிட்டுத்தான் சுடுதண்ணியை ஊத்தி ரெண்டு நிமிஷம் ஊறவச்சா போதும் அப்புடியே சாப்பிடலாம்னு நூடுல்ஸ் வகையெல்லாம் வந்துச்சு. நம்ம ஆளுக அதையும் பாத்ரூமுக்கு போறவழில ஊறவச்சிட்டுப் போவானுக.
 
சாப்புடுற விஷயமாவது பரவாயில்ல... சம்சாரம் தேடுறதும் அப்புடியே போறவழில பொண்ணைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு இப்போ நிறையப் பேரு கிளம்பீட்டாங்க. தம்பி நீ கட்டிக்கிற மாதிரி ஒரு பொண்ணு திருச்சில இருக்குன்னாங்க என்னைக்காவது லீவு நாள்ல போயி பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்டான்னு வீட்டுல சொன்னா... அவரு, "எனக்கு இப்ப லீவெல்லாம் இல்லம்மா... தீவாளிக்கு சொந்த ஊருக்குப் போவோம்ல... அப்போ போறவழில பொண்ணைப் பாத்துட்டு போயிடலாம்"-னு சொல்றாரு. பல வெளிநாடுகள்ல... இன்னைக்கு நம்ம இந்தியாவுலயும் கூடத்தான்... கல்யாணம் பண்ணின தம்பதிக கூட ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போது போறவழில கிட்டத்தட்ட பாதி தாம்பத்தியத்தை முடிச்சிடுறாங்க...மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது.


இதுக்கு யாரையும் குத்தம் சொல்லமுடியாது. அவனவன் இருக்குற அவசரத்துல குத்தவச்சும் சொல்லிக்காட்டமுடியாது. இதைப் படிச்சிட்டு சந்தோசமா இருந்தீங்கன்னா அப்புடியே போறவழில நாலைஞ்சு பேருகிட்ட சொல்லி பெருமைப்படுத்தீட்டு போங்க. செம காண்டுல (இதுக்கு எனக்கே அர்த்தம் தெரியாது) இருந்தீங்கன்னா... போறவழில துப்பீட்டுப் போங்க. இங்க துப்பீராதீங்க. அப்பப்ப உங்களைமாதிரி பல நல்லவங்க போறவழில வந்துபோற இடம் இது. :-)


இது எல்லாமே நம்ம மேல போறவழில நடக்குறதுதான்னு உங்க காவிகட்டுன மனசு சொல்லுமே!




35 comments:

'பரிவை' சே.குமார் said...

//மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது. //


உண்மை... எல்லாம் போற வழியிலதான் ...

ஆராந்து எழுதிய நல்ல பதிவு

Unknown said...

நல்ல திசையை காட்டி இருக்கீங்க... போற வழில பார்க்கிறேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பிரதர்.. ரொம்ப நொந்துபோயி பேசறீக?..
”fast food" யுகமாச்சா.. எல்லாப்பய புள்ளைகளும்
வெந்தது ..வேகாதது-னு ..அவசரமா சாப்பிட ஆரம்பிச்சுட்டானுக..

சரி விடுங்க.. நீங்க சொன்னதில ஒரு பாயிண்ட்க்கு மட்டும் பதில் சொல்றேன்
மீதிக்கு , கொஞ்சம் டாலரை கண்ணுல காமியுங்க..விரிவா..விளக்கமா சொல்றேன்

டாய்லெட்:
கம்பெனில போயி பார்த்துக்குரேனு சொல்ற பயலுககளை மட்டும்..
”பேபி டயாபர்ஸ்” மாட்டிக்கிட்டு போகச்சொல்லுங்க..பஸ்..டிரெயின்..டாக்ஸி..
எங்க வேணா போலாம்.. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும்..கழுவிட்டு..ரீ யூஸ்
பன்ணிகச்சொல்லுங்க..ஹி.ஹி

சேலம் தேவா said...

எங்கேயோ போற வழியில ஒரு பதிவு போட்டுட்டீங்க!!!சூப்பர் சார்!!!

Cable சங்கர் said...

//. (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா?? ;-) ) ந//

அவ்வளவு தைரியம் ஆயிருச்சா..:)

நாடோடி said...

இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மா ப‌திவை போட்டுட்டு நீங்க‌ எங்க‌ போறீங்க‌னு சொல்ல‌லியே!!!!

vasu balaji said...

போற வழியில பொண்ணப்பாத்து புடிச்சி கல்யாணம் கட்டுறப்போ இதெல்லாம் ஜூஜூபி:)

முத்து said...

கமெண்ட் போட டைம் இல்லை

பா.ராஜாராம் said...

போற வழில போறவன் என்பது இதுவா மகன்ஸ்? :-)

ஜாலி, ஓய்.

Jey said...

ரை.ட்.டு...

vinthaimanithan said...

போறவழியில அப்டியே உங்க பக்கம் வந்தா நல்லாத்தான்யா இருக்கு

Karthick Chidambaram said...

ஆமா! என்னோட நண்பர் ஒருவர் நிறுவனம் மாறினார். எப்படிங்க இந்த முடிவு திடீர்னு என்று கேட்டேன்.
போறவழில interview கொடுத்தேன் என்றார்.

போறவழிக்கு புண்ணியமா போகட்டும்னு எழுதி இருக்கீங்கன்னு நெனைக்குறேன்.

a said...

போற வழியில போட்ட பதிவு போல...

ஆ.ஞானசேகரன் said...

போர வழியில போட்ட பதிவை... போர வழியில் படித்து போர வ்ழியில் பின்னுட்டமும் இட்டாச்சி ரோஸ்விக்....

என்ன போர வழியில் நன்றின்னு சொல்லிட்டீங்களா?

நல்ல நடை பாராட்டுகள் நண்பரே

ஸ்ரீராம். said...

ஒரு ஜாலியான ஆராய்ச்சியா...?

ரோஸ்விக் said...

சே.குமார் - நன்றி அண்ணே!

முதல்ல சொன்னது நம்ம ஊர்ல நடக்கிறது. இரண்டாவது சொன்னது வெளிநாடுகள்ல நடக்குது... :-)

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - நன்றி அண்ணே!
எங்கே போறவழில?? :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - ஆஹா பட்டு... இப்போ டயாபர் தயாரிக்கிற கம்பெனி வச்சுட்டியா?
எல்லாத்துக்கும் ஐடியா கொடுக்க நேரமில்லாம போறவழில இதுக்கு மட்டும் ஐடியா கொடுத்துட்டு... மத்ததுக்கு துட்டுக் கேட்கிற பார்த்தியா!!!

நன்றி பட்டு. :-)

ரோஸ்விக் said...

RAJ - மதமாற்றம் செய்யிற பண்ணாடைகளை எதாலையாவது அடிங்க... நானும் என் பங்குக்கு ஒன்னு ரெண்டு அனுப்பிவைக்கிறேன். :-)

எனக்கு மதம்பிடிப்பதுமில்லை... மதம் பிடிப்பதுமில்லை.

ரோஸ்விக் said...

சேலம் தேவா - யோசனையில வந்ததை பதிவா எழுதினா... போறவழில இப்படி சொல்லிட்டு போயிட்டீங்களே தேவா! :-))

நன்றி.

ரோஸ்விக் said...

Cable Sankar - நீங்களெல்லாம் இருக்குறீங்கன்ற தைரியம்தான் தலைவரே! :-)

நன்றி அண்ணே!

ரோஸ்விக் said...

நாடோடி - உருப்படியான வேலையைப் பார்க்கத்தான் போறேன் ஸ்டீபன். :-)

நன்றி.

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - ஆமா பாலாண்ணே! :-)
இதெல்லாம் சப்பைமேட்டருதான்...

நன்றி அண்ணே!

ரோஸ்விக் said...

முத்து - முத்து உனக்கு டைம் இல்லையா? அடப்பாவி பல இடத்துல பட்டா போட்டு உக்கார்ந்து கமெண்ட் போடுவியேயா! இன்னேரம் நீ போட்ட கமெண்ட்டுகளை தொகுத்தா எத்தனை புத்தகம் வெளியிடலாம்னு தெரியலையே! :-))

நன்றி முத்து!

ரோஸ்விக் said...

பா.ராஜாராம் - சித்தப்பா! அதேதான்...
ஆமா என்ன எங்கிட்டோ போறவழில மகன் பக்கம்?? :-)) (சித்தப்பன், மகன் வீட்டுக்கு அப்பப்ப வந்து போறதுல சந்தோசம்தான்)

நன்றி அப்புச்சி!

ரோஸ்விக் said...

Jey - ஜெய் எங்கையா போற? :-)

ரோஸ்விக் said...

Jey - ஜெய் எங்கையா போற? :-)

ரோஸ்விக் said...

விந்தைமனிதன் - நல்லாயிருந்தா சரிதான் அண்ணே! :-)

நன்றி நண்பரே!

ரோஸ்விக் said...

Karthick Chidambaram - வாழ்க்கை போறவழில போவோம்னு உங்க நண்பர் விட்டுட்டாரு போல... அதுவும் நல்லவழில முடிஞ்சது சந்தோஷம். :-)

நன்றி கார்த்திக். (பேரைப் பார்த்தாதான் கொஞ்சம் வில்லங்கமா இருக்கு :-))) )

ரோஸ்விக் said...

வழிப்போக்கன் - யோகேஷ் - இல்லைண்ணே! வேலையில்லாம இருந்தப்பதான் உக்கார்ந்து யோசிச்சு இந்தப் பதிவை போட்டேன். :-)

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - நன்றி ஞானம் அண்ணே! போறவழில சொல்லலைண்ணே. :-))

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - ஆராய்ச்சியெல்லாம் இல்லை தலைவரே! போறவழில உதிச்சது... எல்லா பயலுகளும் ஐ-போனை வைச்சுகிட்டு நோண்டிக்கிட்டே இருந்தானுக... சில பொண்ணுங்க போறவழில மேக்கப் போட்டுச்சுங்க... அதுனால... ;-)

நன்றி ஸ்ரீராம்.

மங்குனி அமைச்சர் said...

என்னா ரோசு, உண்பிகரு திடிடுச்சா , இவ்வளவு விரக்கிதியா இருக்கியே , வீடு நீ போற வழில அப்படியே உன்பிகர பாத்து சரி பண்ணு

எஸ்.கே said...

போற வழில பாத்துக்கலாம்னு நினைக்கிற நிறைய விஷயங்களை ஒழுங்கா முடிக்க முடியறதில்ல சார்!

Gayathri said...

ஹாஹா மாறுபட்டு யோசிசுருகீங்க அருமை