Friday, February 26, 2010

உள்குத்து கவிதைகள் - 6



என் முதுகில்
கருமை பூசியவனுக்கும்
அவன் முகபாவமே காட்டுவேன்...
கண்ணாடி!







அவர்கள் மணக்க
என்னை அடிக்கிறார்கள்...
வாசனை திரவியம்!










வெளிப்பக்கம் உள்ளவன்
குறு குறுன்னு பார்ப்பான்...
உள்பக்கம் உள்ளவன்
குறு குறுப்பாய் பார்ப்பான்...
சிறைச்சாலை!




21 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அவர்கள் மணக்க
என்னை அடிக்கிறார்கள்...
வாசனை திரவியம்!
//////

:-)...... Inner Punch அருமை

தமிழ் உதயம் said...

வித்தியாசமான கவிதைகள்

Chitra said...

உள் குத்து ...இன்னும் நிறைய வரட்டும்.

நாடோடி said...

நல்லா இருக்கு...தொடருங்கள்.

goma said...

உள் குத்துக் கவிதைகளே இப்படியென்றால்...
வெளிக்குத்துக் கவிதைகள்....?!!!
வாசிக்க ஆவல்

மதுரை சரவணன் said...

அருமை . வாழ்த்துக்கள். கவிதை வாசணை அடிக்கிறது

ப்ரியமுடன் வசந்த் said...

பங்கு நல்லா நறுக்குன்னு இருக்குப்பே...

சிவாஜி சங்கர் said...

குறு குறுன்னு..
குறு குறுப்பாய்..
ரோசா பொய் முடி அண்ணே நக்கலு கொஞ்சம் தூக்கலு... ஹிஹி...

hayyram said...

என்னங்க. இன்னிக்கு சாமியாருங்க தினம் ஆச்சே. சாமியார் பதிவு போடாத ஒரே பதிவர் நீங்க தானோ??

regards
ram

www.hayyram.blogspot.com

Thenammai Lakshmanan said...

மூணுமே மெகா குத்து நண்பா

ரோஸ்விக் said...

உலவு.காம் - ரசித்ததற்கு ரொம்ப நன்றி நண்பரே. :-)

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - வித்தியாசமா எழுதி தான் பார்ப்போமே...:-)

ரொம்ப நன்றி சார்.

ரோஸ்விக் said...

Chitra - ஆவலுக்கு நன்றிகள் தோழி. நிறைய உள்குத்துகள் வரும்........

ரோஸ்விக் said...

நாடோடி - ரொம்ப நன்றி நண்பரே! தொடர்ந்து வரும்... ரசியுங்கள். :-)

ரோஸ்விக் said...

goma - வெளிகுத்து கவிதைகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை தோழி... இருந்தாலும் அப்பப்ப வரும்....

நன்றி.

ரோஸ்விக் said...

Madurai Saravanan - தல மதுரை வாசனையேது தெரியுதோ??

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் - நன்றி பங்காளி... :-)

ரோஸ்விக் said...

Sivaji Sankar - ரொம்ப நன்றி தம்பி.... இந்த உள்குத்து கவிதைகள் உங்களுக்காகவே போட்டது... :-)

ரோஸ்விக் said...

hayyram - :-)))

எல்லோர் மாதிரியும் எதுக்குண்ணே நம்ம எழுதனும்? நிறைய பேறு இது மாதிரி அவல் கிடச்சா... அதை பத்தி என்னத்தையாவது எழுதியே தீரணும்னு வேண்டுதல் வச்சிருக்காங்க...

எனக்கு அந்த வேண்டுதல் கிடையாதுண்ணே... :-)

தேவைபட்டா... நம்மளும் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடுவோம்... இல்லையா... ஒரு டிவி சேனல் ஆரம்பிச்சுடுவோம்...

ரோஸ்விக் said...

thenammailakshmanan - ரொம்ப நன்றிக்கா... அப்பச்சி எப்புடி இருக்காக? :-)

பத்மநாபன் said...

உள்ளே குத்து , வெளியே கவிதை ..... மெஷின் சூப்பரா வேலை செய்யுது ..