Friday, February 5, 2010

அசலும், வட்டியும் - திரை விமர்சனம் அல்ல...

அண்ணே! நிறையபேரு தலைப்பை சரியா படிச்சுட்டு தான் வந்திருப்பீகன்னு நினைக்கிறேன். என் மச்சானின் சகோதிரியான எனக்கு இன்றும் பிடித்த, எனது ஒன்று விட்ட மாமா மகளான, ஷாலினியின் அன்புக் கணவர், அண்ணன் அஜீத் நடித்த படத்தைப் பற்றியதல்ல இந்த பதிவு. அவர் ஒரு நேயமுள்ள மனிதர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது...

கடன் வாங்குறது தப்புன்னு, கணக்கு வாத்தியாரை தவிர எல்லாரும் சொல்லி இருக்காங்க. ஆனா, எந்த வாத்தியாரு அறிவுரை சொன்னாரோ, முக்குக்கு முக்கு... மூக்கு கண்ணாடிய போட்டுக்கிட்டு, வட்டிகடை வச்சிருக்காங்க... முந்தியெல்லாம், அந்த கடைக்குள்ள போறதுக்கு, பலான இடத்துக்கு போற மாதிரி ஒளிஞ்சு மறைஞ்சு முடிஞ்சா தலையில துண்டை போட்டுக்கிட்டு போவாங்க... கடன வாங்குனவன் கட்டலையினா, அந்த கடைக்காரன் துண்டை போட்டுகிட்டு திரிவான். கொஞ்சம் விவகாரமான ஆளா இருந்தா வாங்குனவன் கழுத்துல துண்டை போட்டு கேட்பான்.

பல வீடுகள்ளையும், நாடுகள்ளையும் பட்ஜெட்டுல துண்டு விழுகுரதுனால தான் கடன் வாங்குறாங்க. யோவ், பக்கெட்டுல துண்டு விழுந்த துவைச்சு புழிஞ்சு காயப்போட்டுடலாம். பாருங்கய்யா... இந்த கடனுக்கும், துண்டுக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு... நம்ம, கடன்காரன்கிட்ட... அய்யய்யோ கடன் கொடுக்குற கடைகாரன்கிட்ட, வாங்குற பணத்துக்குப் பேரும் அசல் தான். இந்த அசலை கடைகாரன், கள்ளப் பணமா கொடுத்தாலுஞ் சரி, கள்ள நோட்டா கொடுத்தாலுஞ் சரி நாம அதுக்கு வட்டி கட்டனும்.

இந்த வட்டியோட விகிதம் சில இடத்துல சோமாலியா குழந்தை மாதிரியும்(இப்ப எங்க இருக்கு??), சில இடத்துல கறிக்காக வளக்குற வெள்ளை பன்னி மாதிரியும் இருக்கும். இந்த வட்டிய கணக்கு பண்றதுக்கு, நம்ம பய புள்ளிக குட்டிய கணக்கு பண்றதுக்கு வச்சிருக்குற மாதிரி பல சூத்திரம் இருக்கு. இதுல தனி வட்டி, கூட்டு வட்டி அது போடுற குட்டின்னு நம்ம தல (யோவ், நான் அவர சொல்லலைய்யா...) மேல ஏறி உக்காந்துக்கிட்டு... நம்ம கழுத்த நெரிச்சுகிட்டு இருக்கும். இந்த அசலும், வட்டியும் சேர்ந்து ரத்தம் குடிச்ச குடும்பம் எல்லாம் சத்தமில்லாம, விஷ மருந்துக்கு பிரெஞ்சு முத்தம் குடுத்துருக்காங்க. ரொம்ப சோகமான எளவுகள் (இழவுகள்) எல்லாம் நடந்திருக்குய்யா இதுனால...

ஏதோ இந்த பணங்கள் மட்டும், ஜாதி மத பேதமில்லாம பல இடங்கள்ல சமத்துவமா இருக்குன்னு பார்த்தா... எல்லாருகிட்டயும் சமமா இல்லாம போயிடுச்சு. எல்லாரும், வசதியா இருக்கணும், வசதியா வாழணும்னு நினைச்சுகிட்டு, பணக்காரனா வாழ ஆசைப்பட்டு, தன் வசதிய இழந்துடுறாங்க. பணக்காரனா வாழ்றது வேற.. வசதியா வாழ்றது வேற-னு இன்னும் நிறைய பேறு புரிஞ்சுகிறது இல்ல...

வெள்ளைக்காரன் மொழியில இந்த அசலுக்குப்(படத்தை சொல்லலை சாமி) பேரு principal amount... அவரு பணத்தை ஏன்யா இங்க இழுக்குராய்ங்கன்னு நான் நினைச்சதுண்டு... இதவிட கொடும அந்த வட்டிக்கு பேரு Interest ... யாருய்யா அவ்வளவு interest-ஆ கொடுக்குறான்? இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமில்ல அய்யா.... திரும்ப கொடுக்கலேன்னா அடித்தல், வகுந்தல் (உடம்பை), பறித்தல் (உயிரை)-னு நிறைய வ(லி)ழிவகை வச்சிருப்பாய்ங்க...

இப்பவெல்லாம், சில தேன் குரல் கொண்ட, கருங்குயில்களையோ, இல்லை பெருங்குயில்கலையோ விட்டு நம்ம தொலைபேசியில் தொல்லை குடுத்து, கடன் குடுக்குராய்ங்க... கொஞ்சம் கவுரவமாத்தான் இருக்கு... அவயங்களும், நம்மளும் ஒழுங்கா நடந்துகிட்டா... இருந்தாலும் மக்களே, தேவைகளை தேவை இல்லாம கூட்டி, தேவையே இல்லாம கடன வாங்கி... தேவையில்லாத பிரச்சனைகள்ல மாட்டிக்காதீங்க... இது நமக்கு தேவையில்லாத பிரச்சனை... அப்பறம் கடன் குடுத்தவன், அசல் பட காமெரா மாதிரி நம்ம பின்னாடியே வருவாய்ங்க... உஷாரா இருங்க... உங்க நிஜார கழட்டிடுவாய்ங்க...




43 comments:

problogger said...

மொக்கை மொக்கை என்று கூவிக்கொல்கிறேன்

ரோஸ்விக் said...

problogger - அண்ணே! மொக்கை போடலையினா நம்மள பதிவுலக ஆட்டையில பல தடவை வெளிய நிக்க வச்சிருவாய்ங்க...

ரொம்ப சீரியசா எப்போதும் எழுதுனா... மூக்கை சிந்தி நம்ம மூஞ்சில வீசுவாய்ங்க போல... அதான் அப்பப்ப நம்மளும், __ஓட சேர்ந்த _மாதிரி... :-)))

புரியுது புரியது நீங்க தல ரசிகர்னு... கோவப்படாதீங்க...

vasu balaji said...

இருக்க விடமாட்டுறானுங்களே. :))

Paleo God said...

இது அழகாய் நம்மை சுற்றி பின்னப்பட்ட ஒரு சதிவ(லை)ளைதான்:)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நெம்ப கஷ்டம்னே இவங்ககிட்ட... :-)) எப்புடினே இருக்கு உடம்பு?

ரோஸ்விக் said...

ஷங்கர்.. - ரொம்ப நன்றிண்ணே.
அண்ணே இந்த உங்க போட்டோ மட்டும் வரலானா... நான் ஏதோ பிரமாண்ட ஷங்கர் வந்துட்டார்னு நினைச்சிருப்பேன். :-))
நம்ம பலாபட்டறை எப்புடிண்ணே போகுது??

சிவாஜி சங்கர் said...

அண்ணே... கணக்குல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் ஓ.கே புரிஞ்சுது...

//நம்ம பய புள்ளிக குட்டிய கணக்கு பண்றதுக்கு வச்சிருக்குற மாதிரி பல சூத்திரம் இருக்கு.//
இந்த சூத்திரம் மட்டும் மறந்தாப்புல இருக்கு..
formula-வ கொஞ்சம் வெளக்கமா போடுறீயளா??

ஸ்ரீராம். said...

voted.


"கடன் வாங்குறது தப்புன்னு, கணக்கு வாத்தியாரை தவிர எல்லாரும் சொல்லி இருக்காங்க"

ரசித்தவரிகள்......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாரு.. ரோஸ்விக்...
உங்க கடைக்கு வந்திருக்கேன்...
ஆமா ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க சார்....

பா.ராஜாராம் said...

ஹி..ஹி..மகனே,

அடிச்சு ஆடியிருக்கீங்க.இந்த தடவை காளையார்கோவில் சிவகங்கை மேட்சில் கா.கோவில் வெற்றி அப்பு.ஒத்துக்கிறேன்.இன்னும் மேட்ச் இருக்குள்ள..

சந்தோசம் மகனே.

Thenammai Lakshmanan said...

தலையோட படம்னு வந்தேன் ஏமாத்திட்டீங்க ரோஸ்விக்கு ஆனா கடன் வாங்காம இருக்குறது நல்லதுதான்

Thenammai Lakshmanan said...

ரோஸ்விக் said...
ஷங்கர்.. - ரொம்ப நன்றிண்ணே.
அண்ணே இந்த உங்க போட்டோ மட்டும் வரலானா... நான் ஏதோ பிரமாண்ட ஷங்கர் வந்துட்டார்னு நினைச்சிருப்பேன். :-))

hahaha fine rosewick

Thenammai Lakshmanan said...

Sivaji Sankar said...
அண்ணே... கணக்குல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் ஓ.கே புரிஞ்சுது...

//நம்ம பய புள்ளிக குட்டிய கணக்கு பண்றதுக்கு வச்சிருக்குற மாதிரி பல சூத்திரம் இருக்கு.//
இந்த சூத்திரம் மட்டும் மறந்தாப்புல இருக்கு..
formula-வ கொஞ்சம் வெளக்கமா போடுறீயளா??//

shivaji ithu niya niya niya
nambavey mudiyalappa.....!!

Thenammai Lakshmanan said...

பா.ராஜாராம் said...
ஹி..ஹி..மகனே,

அடிச்சு ஆடியிருக்கீங்க.இந்த தடவை காளையார்கோவில் சிவகங்கை மேட்சில் கா.கோவில் வெற்றி அப்பு.ஒத்துக்கிறேன்.இன்னும் மேட்ச் இருக்குள்ள..

சந்தோசம் மகனே.

makkaa enna vilaiyattu ithunnu sollungka ..
match parkumpothu naangkalum vanthurroomm...

ரோஸ்விக் said...

Sivaji Sankar -

தம்பி, எனக்கு கீழ உள்ள சூத்திரம் தான் ஞாபகத்துல இருக்கு... முடிஞ்சா நீங்க பயன்படுத்தி பாருங்க...:-)))

Enter in Column A, Row 3, "= (B3*C3)/D3*(1-(1+(C3/D3))^(D3*E3)))". Do not include the quotation marks.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம் - ரொம்ப நன்றி தல வந்து ரசிச்சதுக்கு...:-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - வழக்கமா ஒட்டு போட்டா இலவச வேட்டி சேல தருவோம். உனக்கு மட்டும் நாடா வச்ச டவுசரு நாலு தாரேன்... :-))))

ரோஸ்விக் said...

பா.ராஜாராம் - சித்தப்பன் ஜெயிச்சா என்ன.... மகன் ஜெயிச்சா என்ன...?
ராசா நான் அசலுக்கும் ரசிகன் இல்ல.... வேட்டைகாரனுக்கும் ரசிகன் இல்ல...

உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன் சித்தப்பு... :-)

ரோஸ்விக் said...

thenammailakshmanan - அக்கா... தலைப்புலே சொல்லிட்டேன் அக்கா... கவலையே படாதீங்க அக்கா... நான் அவ்வளவு சீக்கிரமா திரை விமர்சனம் எழுதமாட்டேன்... :-)))

அக்கா... தம்பி சிவாஜி-ய நல்லவர்னு இன்னும் நீங்க நம்பிகிட்டு இருக்கீங்க... என்னக்கா... நீங்களும் என்னைய மாதிரியே வெள்ளந்தியா இருக்கீங்க... :-)

settaikkaran said...

அசலான "அசல்"லே எவ்வளவு மேட்டர் இருக்குன்னு தெரியலேண்ணே! ஆனா உங்க வட்டி மேட்டர் செம கெட்டியாயிருக்குண்ணே! எப்படியெல்லாம் யோசிக்கிறாக?

நாடோடி said...

//இப்பவெல்லாம், சில தேன் குரல் கொண்ட, கருங்குயில்களையோ, இல்லை பெருங்குயில்கலையோ விட்டு நம்ம தொலைபேசியில் தொல்லை குடுத்து, கடன் குடுக்குராய்ங்க...//

கொடுக்கும் போது அப்படித் தான் கொடுக்குறாங்க...வசூல் பண்ணும் போது..

ப்ரியமுடன் வசந்த் said...

அசல் அசலு...!

புலவன் புலிகேசி said...

தல(அட இதுவும் அவர் இல்லீங்க) இன்னைக்கு வங்கிகளும் கட்ன்காரனாய் (கடன் கொடுப்பவனாய்) பலரது கழுத்த நெறிச்சி தல (அட இதுவும் அவர் இல்லீங்க) -ய திருகிட்டிருக்காங்க.

ஆ.ஞானசேகரன் said...

//உஷாரா இருங்க... உங்க நிஜார கழட்டிடுவாய்ங்க...//

நன்றி நண்பா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகவே..
கருத்துக்கள் சூப்பர்..
நல்லாயிருக்கு
பாக உந்தண்டி ,
சென்னாங்க இத்தாதி...
அச்சா போலதா ஹய்..

ஆகவே எனக்கு உடனடியாக $ 4000 மட்டும் கடனாக
கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Veliyoorkaran said...
This comment has been removed by a blog administrator.
Veliyoorkaran said...

@ பட்டாபட்டி.. said...
ஆகவே எனக்கு உடனடியாக $ 4000 மட்டும் கடனாக கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
நல்லாருக்குன்னு இவ்ளோ பொய் சொல்லிருக்க..இன்னும் ஒரு முன்னூறு வெள்ளி எக்ஸ்ட்ரா கேளுயா...யாருகிட்ட கேக்குற நீ...நம்ம சட்டதுக்கிட்டதான..சும்மா கூச்சபடாம கேளுயா...!!

ILLUMINATI said...

thanks for the comment my friend........

ILLUMINATI said...

// சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்குது... நீ தமிழ்லையும் எழுதுயா... நம்ம ஆளுங்க விரும்பி படிப்பாங்க...

சினிமான்னா உனக்கு அவ்வளவு உசிரா மாமு?? :-)) நிறைய இங்கிலீஷ் படம் பாப்பியாட்டம் இருக்கு...//
அட!சினிமா எல்லாம் நமக்கு ஜுஜுபி தல...தமிழு,இங்கிலிசு,தெலுகு,ஹிந்தி,கொரியன்னு ஒரு சுத்து சுத்தி ரவுண்டு கட்டி அடிப்போம்.
ஆனா,எனக்கு சினிமாவ விட நாவல் ரொம்ப பிடிக்கும்.அத விட காமிக்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.என்ன ஒரே வருத்தம்,காமிக்ஸ் சின்ன பசங்களுக்கு உண்டானதுங்கற அந்த தப்பான எண்ணம் தமிழ்நாட்டுல வேர் ஊன்றிடுசேன்னு தான்.you guys don’t know what you are missing.....
இதையே வெளியுருகிட்ட கேட்டா பிகரு பிகருனு அலையும்(தனியாதான்,அத சொல்லவும் வேணுமா?) பக்கி....

//சும்மா சொல்லக்கூடதுய்யா... உண்மையிலே நல்லா இருக்குது... நீ தமிழ்லையும் எழுதுயா... நம்ம ஆளுங்க விரும்பி படிப்பாங்க...//

அப்டின்ட்ரிங்க?செரி தல,variety is the spice of life.ட்ரை பண்ணலாம்....
ஆனா என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே....இல்ல நேத்து மப்புல என்ன அடிக்கிரோம்னு தெரியாம டைப் பண்ணிபுட்டிரா?

ILLUMINATI said...
This comment has been removed by a blog administrator.
Veliyoorkaran said...

Sorry man...I wrt that comment just for fun..Dont take it to heart...
Cheers. :)

Veliyoorkaran said...

Hi Rosewik,Bit busy with my work..I will catch you back very soon.. :)

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லாயிருக்கு, உங்க பாஷையில் சொன்னால் வட்டியும் முதலுமாக பிழிந்து பின்னிவிட்டீர்கள். நல்ல கருத்தான பதிவு. கடன் வாங்கி செலவும் வேண்டாம். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற நிலையும் வேண்டாம். நன்றி ரோஸ்விக் சார்.

ரோஸ்விக் said...

சேட்டைக்காரன் - ரொம்ப நன்றி சே(வே)ட்டைக்காரன் அண்ணே. :-)

ரோஸ்விக் said...

நாடோடி - திரும்ப வாங்கும்போது நம்ம கழுத்துல துண்டெல்லாம் போட்டு கேட்க மாட்டாய்ங்க... வேணும்னா துண்டு துண்டா போட்டு கேப்பாய்ங்க நண்பா... உஷாரா இருக்கணும்.

வருகைக்கு நன்றி நண்பா.

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் - நல்ல வேலை பங்காளி.. டொட்டோடோயிங்-னு மியூசிக் போடாம போனீங்களே... :-)

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - புலவா, உங்களுக்கும் நக்கல் கொஞ்சம் கூடித்தான் போச்சு.. :-))) ரொம்ப நன்றி தல(அட அவருக்கு இல்லப்பா)...

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - $ 4000 கொடுத்தாலும் அதோட ஒரு பட்டாப்பட்டி இலவசமா வேணும்னு வேற கேப்பீர நீறு... அதுக்குத்தாம் ஓய் அவா பயப்படுறா... :-)

ரோஸ்விக் said...

Veliyoorkaran - நீ பாட்டுக்க ஏத்திவிட்டுட்டு போயிடாதய்யா... இதுக்கு முன்னாடி அவரு மூணு தடவை $ 4000 வாங்கி இருக்குறது உமக்கு தெரியாது ஓய்...

ரோஸ்விக் said...

ILLUMINATI - இலுமு .... உண்மையத்தான்யா சொன்னேன்... நான் மப்பு எல்லாம் போடமாட்டேன்லே...

ரோஸ்விக் said...

Veliyoorkaran - Nothing serious in that comment makka... come on enjoy... :-)))

complete your work pressure... then we will start again.

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - இதுக்குப் பேரு தான் பித்தனின் வாக்குங்கிறது.. :-)

நன்றி தல.