Wednesday, August 19, 2009

முந்தி விரிக்கிற விஷயத்த முந்தி சொன்னாதானே

சிரிச்சு சிரிச்சு பேசுற நமக்கு, சிறப்பா எழுத வந்தாலும் (அட விடுங்கப்பா, வேற யாரும் சொல்ல மாடாங்கல்ல அதான்)...சிரிப்பா எழுத வரலயேனு....நம்ம நண்பர்கள்லாம் சிரிச்சுப்புட்டா! என்ன ஆகுறது? கைப்புள்ள எடுறா வண்டிய......

இங்க படிக்க வர்றவக எல்லாம் நம்ம நாக்கோட நக்கல (ஏய் தப்ப புரிஞ்சுகாதீங்கப்ப!) தெரிஞ்சுகிரட்டும்னு....வாயடிச்சு வாயடிச்சு அத வார்த்தையா ஊத்தி வாக்கியமா வார்த்துடுவோம்னு .....தட்டச்சு பலகைய தடவித்தடவி தமிழைப் பிரசுரிக்கிறேன்(யாருண்ணே அது பிரசவிக்கிறேன்னு தப்பா வாசிக்கிறது?)

கத எழுதுவோமா? கவித எழுதுவோமா?னு கண்ண கசக்கவும், காகித்த கசக்கவும் இந்த வலைப்பூவுல தேவை இல்ல...நம்மளும் என்னத்தையாவது கசக்கி(மூளயத்தாம்பா சொன்னேன்) எழுதிடுவோம். படிக்கிறவன் படுச்சுட்டு போகட்டும்....அடிக்கிறதுக்கு தான் நம்ம அட்ரஸ் இல்லையேனு ஒரு தெகிரியத்துல(தைரியத்துல) எழுத வந்துட்டேன்.

நாட்டுல பத்தி எரியுரத, பத்தி பத்தியா சொன்னாலும், முந்தி விரிக்கிற விஷயத்த முந்தி சொன்னாதானே, படிக்கிறதுக்கு கூட்டம் முந்திக்கிட்டு வருது. கூட்டத்தின் குறிப்பறிந்து நீயும் எழுதுடான்னு சொன்ன நண்பனுக்கு இந்த பதிவு அன்பளிப்பு!

அதுவும் சரி தானே! ரொம்ப ராவி ராவி அப்புறம் நமக்கு ராவ் அவார்ட்(அண்ணே நரசிம்ம ராவ்னு புரிஞ்சுக்கிட்டா...நான் பொறுப்பு இல்ல) கொடுத்துறப் போறிங்க! பதிவுலகத்துல நிறைய அவார்ட் கிடைக்கும்ண்ணே....வேற துறையில விருது வாங்குறது, நம்ம அரசுத் துறைய்லே இருந்து சான்றிதல்கள் வாங்குற மாதிரி ரொம்ப கஷ்டம்௦-ண்ணே...அதான் இந்த உலகத்துல எல்லாத்தையும் சீக்கிரம் வாங்கனும்னு நிறைய பேறு நினைக்கிற மாதிரி....நானும் வாங்குறதுன்னு முடிவு பண்ணீட்டேன்.

இங்க உங்க ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களால அடி வாங்குறது நமக்கு அவார்ட் வாங்குன மாதிரி! எந்த கட்டையையும் (நாட்டு கட்டை மட்டும் விதி விலக்கு) எடுத்துக்கிட்டு வந்து என்னை பதிவர் சந்திப்புக்கு கூப்புடாதீங்கப்பா!

கருத்து கந்தசாமிங்க பல பேரு இருக்கும் போது எதுக்குடா இந்த குருத்து?னு நீங்க மறுத்து சொல்லிடக்கூடாதுள்ள....நம்ம எழுத்து ரசிக்க, ருசிக்க, யோசிக்க, நாலு பேரு கலந்து பேசிக்க முடியிறது மாதிரி இருந்தா நல்லது தானே....

அலுவலகத்துல டேமஜர் குடுத்த டாகுமெண்டை படிக்க முடியாம இங்க வந்தா...இவிங்களும் இலக்கியவாதினு காமிக்க....கமா, புல்ஸ்டாப் இல்லாம கருத்து, கத, கவித, காப்பியம்னு எழுதுறாங்கனு நமக்கு வோட்டு போடாம மூடிட்டு(ப்ரொவ்ஸெரைத்தான்) போயிரப் போறாங்க.

எழுதுறதுல எதுவும் அசிங்கம்னு நினச்சு, ஒதுங்கி போயிடாதீங்க! அசிங்கங்கள் இல்லையினா அழகானதை பிரித்து உணரமுடியாம போயிடுவோம். நல்லது கெட்டது (கெட்டதா தோன்றது) எல்லாத்தையும் ரசிப்போம். இது ரகசியமா எல்லார் மனசிலையும் நடக்குறது தானே.... கெட்டதுன்னு நினச்சா சங்கதி சொல்லுறதுக்கு சந்ததி இல்லாம போயிடும்யா...அது சாமி குத்தம்....உங்க மனசு குத்தும்....

நம்மளையும் ஆட்டையிலே சேத்துக்கங்க...அட நானும் உங்க ஆளுதாண்ணே .....அக்காமார்களும், அத்தாச்சிமார்களும் ஆதரவு கொடுங்க...

நீங்க இங்க வர்றதுக்கு அடையாள அட்டையெல்லாம் கேட்க மாட்டேன்...ஆனா வந்ததுக்கு அடையாளமா பின்னூட்டத்தையும், ஒரு வோட்டையும் போட்டுப் போங்க...