Saturday, August 15, 2009

செந்தில் நாதா! உன் இதயம் துடிக்க

நண்பா! செந்தில் நாதா!
உன் இதயம் துடிக்க
பல இதயங்கள் துடிதுடிக்கின்றன...

பல ஜீவன்கள் உனைச் சார்ந்து!
உன் இதயமும் துடிக்கட்டுமே
உன்னுடன் சேர்ந்து....

பக்திகளோ! சக்திகளோ!
பல உத்திகளின் மூலம்
நட்ப்புக்கள் சேர்ந்தன ஒன்றாக உனக்காய்...

அச்சம் வேண்டாம்
மானிடம் இன்னும் மிச்சமிருக்கிறது...
நண்பர்கள் நிரூபித்து விட்டார்கள்!

மருத்துவம் தன் மகத்துவம்
நிரூபிக்கும் நேரமிது...
இனி மருத்துவர்களின் பாரமிது!

கவலை விடு
கண்ணில் நீர்த் திவலைகள் வேண்டாம்...
கடிகாரம் அல்ல நம் இதயம்
நமக்காக மட்டுமே துடிப்பதற்கு!

நமக்காய் துடித்த இதயம்
நண்பனுக்காய் துடிப்பதில் மகிழ்ச்சி....
கனிந்த இதயங்கள் கூடி
முடிந்த உதவிகள் செய்திடுவோம்

கண்டதில்லை உன்னை
ஒரு போதும் இதற்க்கு முன்...
காத்திருப்பேன் உனக்காய்
இந்த நண்பர்களுக்குப் பின்...........

உன் நலம் விரும்பி,
ரோஸ்விக்