Monday, September 28, 2009

அடர்நிறம் உனக்குப் பொருத்தமாம் !




அடர்நிறம் உனக்குப் பொருத்தமாம் !
அடம்பிடித்து என் மனது...

அனுதினமும் உனைக் காண
அலைகளென பாய்கிறது...

அவளிடம் உனக்கு
பிடித்து என்னவென்றால்? - பித்து என்கிறது...

உன்னோடு இணைந்திருந்தால்
என்றென்றும் இன்பமடி...

உனைத் துறந்தால்
அப்பிரிவே துன்பமடி...

தூங்காத என் இதயம்
தாங்காத சோகத்திலும்
நீங்காத நினைவுகளில்
நித்தம் உன் வழியெங்கும்
மலர் தூவி மகிழ்ந்திடுமே....





0 comments: